புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி புதுமையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
பார்க்க அழகாகவும், நாவிற்குச் சுவையாகவும் இருந்தால் மட்டும் போதும் என நினைத்து தயாரிக்கப்படும் உணவுகள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.
ஒரு வாரமாகச் சேர்த்து வைக்கப்பட்ட சிக்கனில் கலரும், வினிகரும் சேர்தத்து பழைய சிக்கன் கூடப் புதிய சிக்கனாக நமது உணவுத் தட்டுகளில் பரிமாறப்படுகிறது.
புதிய பரிணாமத்தில் உணவுகளாகி இன்றைய தலைமுறையை ஈர்த்தாலும் இது சரியான உணவு முறையா என்பது கேள்விக்குறியே. ஆனால் இது நமக்கு உணவா? அல்லது விஷமா? என்பதற்கு விளக்கமளிக்கிறார் தமிழகத்தின் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்போல்.
காலத்திற்கேற்ப உணவுகள்
அந்தந்த காலத்திற்கு ஏற்றதான உணவுகளை உண்ண வேண்டும். காலம் கடந்து உணவருந்துதல் தவறு. இரவில் உணவுடன் தயிரை சேர்த்துக் கொள்வதால் சமிபாட்டுப் பிரச்சினை அதிகரிக்கும்.
அவ்வாறு இரவில் தயிரை உட்கொண்டால், ஒரு மைக்ரோ அளவிற்குக் கூட சமிபாடு அடையாது. இரவில் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவு தயிரும், கீரையுமே உள்ளது.
கோடைக் காலம்
இக்காலத்தில் எளிதில் சமிபாட டையக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது.
கோடை காலத்தில் சூழலும் வெப்பமாக இருப்பதால் எளிதில் சமிபாடடையக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது.
மழைக் காலம்
அடிக்கடி பசி எடுக்கும் காலம் இது. ஆகையால் நீண்ட நேரம் சமிபாடடையும் படியான உணவுகளை உட்கொள்ளல் வேண்டும்.
நிலத்திற்கேற்ப உணவுகள்
ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு சுவை இருக்கும். அந்தந்த இடங்களைப் பொறுத்து அங்கு விளையும் பொருட்களின் சுவை மாறுபடும்.
அதுபோன்று நம் நாட்டில் விளையும் காய், கனிகளை உண்ணுவதே நல்லது. நாட்டுப் பழங்கள், நாட்டுக் காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் என அனைத்தும் நம் நாட்டில் விளையக் கூடியதாகவும், தயாரிக்கப்படுவதாகவும் இருப்பதே ஆரோக்கியத்தை அளிக்கும்.
எதிர் எதிர் குணங்கள் கொண்ட உணவுகள்
குளிர்ச்சியும் சூடும் போன்ற எதிரெதிர் குணங்கள் கொண்ட உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்.
பால் , கொள்ளு, தேன் மற்றும் நெய் போன்ற இரு குணங்கள் கொண்ட உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உட்கொண்டால் ஸ்லோ பொய்சன் (slow poison) ஆகும்.
சில மூலிகை மருத்துவத்தில் தேனும் நெய்யும் கலந்து உட்கொள்வது வழக்கம். அவர்கள் கூட சம அளவு தேனையும் நெய்யையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இரண்டில் ஒன்றின் அளவை குறைத்து சாப்பிடுவது அவசியம். இல்லையெனில் இதற்கு ஒரு தனி மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும் என கூறியிருக்கிறார்கள்.
மில்க் ஷேக்குகள்
இனிப்பு சுவை கொண்ட பழங்களுடன் (அப்பிள், வாழை) பால் சேர்ப்பது ஓரளவிற்குப் பரவாயில்லை.
பழங்களுடன் பால் சேர்க்கும் மில்க் ஷேக்கிற்குத் தனியான வரவேற்பு உண்டு. சிட்ரஸ் (எலுமிச்சை, ஒரேஞ்ச்) பழங்களுடன் பால், மெலான் பழங்களுடன் பால் ( தர்ப்பூசணி, பப்பாளி, கிர்ணி) போன்றவற்றைச் சேர்க்கவே கூடாது.
புளிப்பு சுவை கொண்ட மாதுளை பழத்துடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக அருந்தக் கூடாது.
பிரியாணி போன்ற பாரமான உணவுகளை உட்கொண்ட பின்னர் சூடான டீ ஒன்றை அருந்தலாம். ஆனால் குளிரான பாணங்களை அருந்தக் கூடாது.
மா சத்தான உணவுடன் பருப்பைச் சேர்க்கலாம். பருப்பை வேக வைக்கும் போது மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
மா சத்துகளும், காய்கறிகளும், ப்ரவுன் அரிசியும் சேர்த்துச் சாப்பிடலாம். புரதச் சத்துள்ள உணவையும் காய்கறிகளையும் சேர்க்கலாம்.
கஞ்சி வகையானவற்றை அருந்துவதற்கு முன்னரும் பின்னரும் நீர் அருந்துதலை தவிர்த்துக் கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் பருவகால பழவகை களை ஒரு கப் அளவிற்குச் சேர்த்துக் கொள்ளலாம்.
பழச்சாறாகவோ மில்க் ஷேக்காகவோ உட்கொள்வதை விட பழங்களை தனியாகவே உட்கொள்வது நல்லது.
Recent Articles